
பஹத் பாசிலுக்காக படத்தை விட்டுக்கொடுத்த நிவின்பாலி
ஆனால் இந்த படத்திற்கு முதலில் கதாநாயகனாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நடிகர் நிவின்பாலியிடம் தான். இந்த படத்தின் கதை பற்றி இயக்குனர் நிவின்பாலியுடன் பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில் அவர் துறைமுகம் மற்றும் படவேட்டு ஆகிய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் பஹத் பாசிலுடன் ஏதேச்சையாக பேசும்போது இந்த கதை பற்றி அகில் சத்யன் கூறியுள்ளார். கதையில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆன பகத் பாஸில் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கேட்டுள்ளார்.
நிவின் பாலியிடம் ஏற்கனவே இந்த கதை குறித்து கூறியுள்ளதாக சொன்ன அகில் சத்யன் பின்னர் நிவின்பாலியை தொடர்பு கொண்டு, பஹத் பாசிலின் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் சந்தோஷமான நிவின்பாலி எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக இந்த கதையை பஹத் பாசிலுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். அதேசமயம் ஏற்கனவே நிவின்பாலிக்கு ஏற்றபடி எழுதப்பட்டிருந்த இந்த கதையில் அதன்பிறகு பஹத் பாசிலுக்காக மீண்டும் சில மாற்றங்களை செய்தாராம் அகில் சத்யன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!