
யாரோ ஒருவரிடம் தான் குழந்தை வளர வேண்டும் : தசரா வில்லன் நடிகர் ஓபன் டாக்
இந்த நிலையில் மலையாளத்தில் அடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின்போது ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறும் போது தானும் தனது மனைவியும் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ள ஷைன் டாம் சாக்கோ தனது ஏழு வயது மகன் அவனது தாயிடம் தான் வளர்கிறான் என்கிற தகவலையும் கூறினார்.
அது மட்டுமல்ல கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தால், அதன்பின்னர் குழந்தைகள் யாரோ ஒருவரிடம் மட்டும் தான் வளர வேண்டும். அவர்கள் அந்த ஒருவரது பக்கத்துக் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்தாலும் தப்பில்லை. அங்கே பத்து நாள், இங்கே பத்து நாள் என மாறி மாறி குழந்தைகள் வளரும்போது தேவையில்லாமல் அவர்கள் குழப்பத்திற்கு ஆளாவார்கள். அம்மா அப்பா இருவரின் வார்த்தை தாக்குதல்களுக்கும் ஆளாவார்கள். அதற்கு பதிலாக யாரோ ஒருவரிடம் தொடர்ந்து வளர்வதுதான் குழந்தைகளுக்கு நல்லது” என்று கூறியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!