
மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி
அந்த வகையில் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரிஷப் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதுமட்டுமல்ல அடுத்தது தான் நடிக்க இருப்பது கன்னட திரைப்படம் தான் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு காந்தாரா படத்தின் தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என கூறியிருந்தார். அதேசமயம் காந்தாரா 2 உடனடியாக துவங்கப்பட போவதில்லை என்றும் வேறு ஒரு கன்னட படத்தில் தான் ரிஷப் ஷெட்டி, நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!