
மாளிகைப்புரம் பட வெற்றி : சபரிமலை சென்று நன்றி தெரிவித்த உன்னிமுகுந்தன்
இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது நன்றியை செலுத்துவதற்காக சபரிமலைக்கு சென்று வழிபட்டு வந்துள்ளார் உன்னி முகுந்தன். இது குறித்து அவர் கூறும்போது, “கடந்த வருடம் இதே ஜனவரி 14-ஆம் தேதி நான் நடித்த மேப்படியான் என்கிற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தை நான் தான் தயாரித்திருந்தேன். அதில் சுவாமி ஐயப்பன் பாடல் ஒன்றை பாடும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்தது. இதோ இதே ஜனவரி 14 மாளிகைப்புரம் என்கிற படத்தின் வெற்றியுடன் இங்கே நான் வந்திருக்கிறேன். இந்த படத்தில் சுவாமி ஐயப்பனாகவே நடிக்கும் மிகப்பெரிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. இதுபோன்று அடுத்தடுத்த வருடங்களில் இதே மகர ஜோதி தினத்தில் நான் இங்கே வரும்போது இதுபோன்று இன்னும் அடுத்தடுத்த முன்னேற்றங்களுடன் வரவேண்டுமென இறைவனை வேண்டிக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!