
மம்முட்டி பட இயக்குனரை உள்ளே அனுமதிக்க மறுத்த கல்லூரி நிர்வாகம்
இந்த நிலையில் இந்த மாணவர்களுக்கு ஆர்ட் ஆப் புரொடெஸ்ட் என்கிற தலைப்பில் வகுப்பு எடுப்பதற்காக இயக்குனர் அமல் நீரத் கல்லூரிக்கு வந்தார். ஆனால் அவரை போலீசாரும் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த பாதுகாவலர்களும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதை தொடர்ந்து கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு அரங்கு ஒன்றில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தினார் அமல் நீரத். மேலும் மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்து விட்டு சென்றார். மலையாள சினிமாவில் பிரபல இயக்குனரும் எழுத்தாளருமான அடூர் கோபாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட சங்கர் மோகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் இயக்குனர் அமல் நீரத் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!