
விமர்சகர்களை மிரட்டுகிறார்கள் - ரோஷன் ஆண்ட்ரூஸ்
இதுகுறித்து ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறியிருப்பதாவது: 17 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். பார்வையாளர்களின் ஆதரவால்தான் இது சாத்தியமானது. எவருடைய விமர்சனங்களை தவறாகச் சொல்லவில்லை. சில விமர்சகர்களின் தரம் பற்றிதான் கவலைப்படுகிறேன். படம் பற்றி தவறான விமர்சனம் செய்துவிடுவதாகச் சொல்லி தயாரிப்பாளர்களைச் சிலர் மிரட்டுகின்றனர். 2 லட்சம் வாங்கிக்கொண்டு, மோசமான படத்தை நன்றாக இருக்கிறது என்று டுவீட் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
யுடியூப் விமர்சகர்கள் படத்தின் இடைவேளையிலேயே வந்து படம் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்க திரையரங்குகளில் முற்றுகையிடுகின்றனர். அவர்கள் வருமானத்திற்காக, திரைப்படங்களைக் கொன்று சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை சினிமா பார்வையாளர்களின் பிரதிநிதிகளாகக் கருதுகிறார்கள். நல்ல விமர்சனம் செய்யும் யுடியூபர்கள் குறைவு. படத்தை விமர்சிக்கட்டும், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயத்தை ஏன் இழுக்க வேண்டும்?
இவ்வாறு ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!