
6ம் பாகம் வரும்.. 2ம் பாகம் வராது ; மம்முட்டி ஓபன் டாக்
இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் 15 வருஷங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ராஜமாணிக்கம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா என சமீபத்தில் மம்முட்டியிடம் கேட்டபோது, “அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.. அந்த படத்தின் கதை கிளைமாக்ஸில் இனிதே நிறைவடைந்து விட்டது. அதற்கு வலுக்கட்டாயமாக இரண்டாம் பாகம் எடுக்க முடியாது.. எடுக்கவேண்டிய தேவையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் கடந்த 30 வருடங்களாக அவர் தொடர்ந்து சேதுராம அய்யர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபிஐ டைரி குறிப்பு படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஐந்தாம் பாகம் வெளியாகி வெற்றியை பெற்றது. இதுபற்றி மம்முட்டி குறிப்பிடும்போது இந்த படத்திற்கு ஆறாம் பாகமும் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன் அவர் நடித்த போக்கிரி ராஜா படத்தின் வெற்றியை மனதில் வைத்துக்கொண்டு, வலுக்கட்டாயமாக இரண்டாம் பாகமாக மதுரராஜா என்கிற படத்தை எடுத்து அது மிகப்பெரிய தோல்வி கண்டதால், எந்த படங்களுக்கு அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை மம்முட்டி தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!