
ராஜமவுலியின் படங்களுக்கு அமெரிக்க திரைப்பட விழா வழங்கும் கவுரவம்
இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள "பியாண்ட் பெஸ்ட் 2022" திரைப்பட விழா துவங்குகிறது. இந்த விழாவில் இயக்குனர் ராஜமவுலிக்கு கவுரவம் சேர்க்கும் விதமாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு என்கிற பிரிவில் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான ஈகா, மகதீரா, பாகுபலி 2 பாகங்கள் மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய திரைப்படங்கள் செப்.,30 முதல் அக்.,11 வரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள பிரம்மாண்ட திரையரங்குகளில் ரசிகர்களுக்காக திரையிடப்பட இருக்கின்றன.
இந்த தகவலை இந்த விழாவை நடத்தும் அமைப்பே அதிகாரப்பூர்வமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளன்று இந்த விழாவில் நேரிலேயே கலந்துகொள்ளும் இயக்குனர் ராஜமவுலி பார்வையாளர்களுடன் கலந்துரையாடவும் இருக்கிறாராம். இது இயக்குனர் ராஜமவுலிக்கு கிடைத்த இன்னொரு மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்லலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!