
பான் இந்தியா படமாக உருவாகும் மோகன்லாலின் விருஷபா
இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது. ஆனால் இந்த படத்தை இயக்கப்போவது யார், படத்தில் பங்குபெறும் நட்சத்திரங்கள் யார் என்பது குறித்தெல்லாம் எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம் சமீபத்தில் துபாய் சென்றிருந்த மோகன்லால் இந்தப்படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படம் பின்னர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. வரும் 2023 மே மாதம் இந்த படத்தில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!