
ஹிந்தியில் பீம்லா நாயக்கை வெளியிட தடை இல்லை : நீதிமன்றம் உத்தரவு
காரணம் தெலுங்கில் இந்த படத்தில் ரீமேக் ரைட்ஸ் விற்பதற்கு முன்பாகவே இதை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை முதல் ஆளாக வாங்கியவர் தான் ஜான் ஆபிரகாம். தனது சில படங்களை முடித்துவிட்டு இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது பீம்லா நாயக் ஹிந்தியில் வெளியானால் அவரால் நேரடியாக அய்யப்பனும் கோஷியும் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜான் ஆப்ரஹாம்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பீம்லா நாயக் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட தடை ஏதும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.. இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் ஆபிரகாம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!