
திலீப் ஒரு அப்பாவி ; முன்னாள் பெண் டிஜிபி பேட்டி
நடிகை வழக்கில் திலீப்பிற்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், கேரள முன்னாள் டிஜிபி ஸ்ரீகலா என்பவர் திலீப் ஒரு அப்பாவி என்றும் அவரை சுற்றி இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டு உள்ளது என்றும் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் கூறி அதிர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அந்த நாற்பது நிமிட பேட்டியில் அவர் கூறும்போது, “நடிகை கடத்தல் வழக்கில் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ திலீப் உள்ளே இழுக்கப்பட்டு உள்ளார். போலீஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றாலும் தவறுதலாக திலீப் மீது குற்றம் சாட்டியது தவறு என்பதை ஏன் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்த வழக்கில் திலீப் நிறைய கஷ்டப்பட்டு உள்ளார்.
திலீப்பிற்கு எதிராக போலீசார் தாங்கள் வைத்திருப்பதாக சொல்லும் ஆதாரம் முற்றிலும் பொய்யானது. அதேசமயம் திலீப்பின் எதிரிகள் அவரை விட ரொம்பவே பவர்ஃபுல்லானவர்களாக இருக்கிறார்கள். அவருக்கு எதிராக இருப்பதாக சொல்லப்படும் ஆதாரங்கள் அனைத்தும் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான பல்சர் சுனில் மற்றும் அவனது கேங் மூலமாக சித்தரிக்கப்பட்டவை தான்.. அவ்வளவு ஏன் திலீப்பும் அவனும் இணைந்து எடுத்துக் கொண்டதாக வெளியான புகைப்படம் கூட போட்டோஷாப் செய்து போலியாக சித்தரிக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான்.
பல்சர் சுனிலும் அவனது கேங்கும் இதுபோன்று இன்னும் சில நடிகைகளிடம் தாக்குதல் நடத்தி உள்ளார்கள். ஆனால் அவை வெளியே தெரியவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை திலீப் ஒரு அப்பாவி. இந்த வழக்கில் திலீப்புக்கு ஆதரவானவர்கள் யாரிடமும் போலீசார் ஏன் விசாரணை நடத்தவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார் முன்னால் டிஜிபி ஸ்ரீகலா.
இவர் தான் கேரளாவின் முதல் பெண் டிஜிபி என்கிற பெருமையை பெற்றவர். ஒரு முன்னாள் டிஜிபி, அதுவும் ஒரு பெண் நடிகை கடத்தல் வழக்கில் திலீப் வழக்கில் ஒரு அப்பாவி என கூறியிருப்பது சோஷியல் மீடியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இரண்டுவிதமான விவாதங்களையும் தற்போது கிளப்பி விட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!