
குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதில்லை: ராம்சரண் மனைவி அறிவிப்பு
இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய ராம்சரண் "இப்போது எங்கள் கவனமெல்லாம் அவரவர்கள் இலக்கை நோக்கி இருக்கிறது. குழந்தை பெற்றுக் கொண்டால் கவனம் சிதறும் என்பதால் இப்போதைக்கு நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதில்லை" என்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இனி எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று உபசனா அறிவித்திருப்பது சிரஞ்சீவி குடும்பத்தினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமெரிக்க தெலுங்கு சங்கத்தின் சார்பில் ஒரு விழா நடந்தது. இந்த விழாவில் ஈசா யோகா மைய நிறுவனர் சத்குரு கலந்து கொண்டார். அப்போது உபாசனா அவருடன் கலந்துரையாடினார். இந்த உரையாடலில் உபாசனா சத்குருவிடம் "எனது 10 வருட திருமண வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குடும்பத்தை நேசிக்கிறேன். ஆனால் என்னிடம் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை, அதற்கான தகுதி உங்களுக்கு இல்லையா? என்பது பற்றி கேட்கிறார்கள். என்னை போன்ற பெண்களுக்கு இதற்கான வழி தெரிய வேண்டும்" என்றார். இதற்கு பதில் அளித்த சத்குரு "நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றால் உங்களுக்கு நான் விருது தருவேன். பெருகி வரும் மக்கள் தொகையை பார்க்கும்போது இது நல்ல முடிவாக இருக்கும்" என்று சொன்னார். "இதுகுறித்து எனது தாயாரிடமும், மாமியாரிடமும் விரைவில் உங்களை பேச வைப்பேன்" என்றார் உபசனா.
இந்த கலந்துரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது குறிப்பாக ராம் சரணின் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!