
4 முறை தேசிய விருது பெற்றவர் : வங்காள இயக்குனர் தருண் மஜூம்தார் கவலைக்கிடம்
கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென உடல் நலம் மோசமடைந்தது. இதையடுத்து கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுநீரகம் மற்றும் இருதய நோய் காரணமாக அவருக்கு அங்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தருண் மஜூம்தார் 40 படங்கள் வரை இயக்கி உள்ளார். பலிகா பது, குஹேலி, ஸ்ரீமர் பிருத்விராஜ், தாதர் கீர்த்தி" ஆகிய குறிப்பிடத்தக்கவை. கஞ்சர் சுவர்கோ, நிமந்த்ரன், கனடேவதா, ஆரன்யா அமர், அலோ ஆகிய படங்களுக்காக பல்வேறு பிரிவின் கீழ் தேசிய விருது பெற்றுள்ளார். 7 முறை சிறந்த இயக்குனருக்கான வங்காள அரசின் விருதை பெற்றுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!