
முதன் முறையாக அப்பாவுடன் இணைந்து நடிக்கும் லட்சுமி மஞ்சு
இந்த நிலையில் முதன் முறையாக தனது தந்தை மோகன்பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறியிருப்பதாவது: எனது நீண்டநாள் கனவு இது. எனது முதல் ஹீரோ தந்தையுடன் இணைந்து நடிக்கிறேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவருடன் இணைந்து நடிப்பது ஒரு பெரிய விருது பெற்றது போல் இருக்கிறது. இந்த நாளுக்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். தொடர்ந்து முயற்சித்தால் நம் கனவு ஒரு நாள் நனவாகும், என் விஷயத்தில் அது நடந்திருக்கிறது. என்கிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் சித்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறர். பாலிவுட் இயக்குனர் பிரத்திக் பிரஜோஸ் இயக்குகிறார். டைமண்ட் ரத்னபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். சாய் பிரகாஷ் இசை அமைக்கிறார். பிரியதர்சன் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறர்கள். இது ஒரு க்ரைம் த்ரில்லர் வகை படம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!