
கேஜிஎப் இயக்குனர் மீது அப்செட்டில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள்
அந்தவகையில் பிரசாந்த் நீல் கிட்டத்தட்ட பான் இந்தியா டைரக்டர் ஆகிவிட்ட நிலையில் அடுத்ததாக அவர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் சலார் படத்தை அவர் இயக்கிவந்த சமயத்திலேயே அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்கப்போவதாகத்தான் அடிக்கடி செய்திகள் வெளியாகின. அவரும் கூட சூசகமாக அதை வெளிப்படுத்தி வந்தார்.
ஆனால் ராம்சரண் படத்தை இயக்குவதாக எந்தவித யூகமான செய்திகளும் வெளியாகாத நிலையில் திடீரென இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஜூனியர் என்டிஆர்-பிரசாந்த் நீல் கூட்டணியில் பிரமாண்டமான ஒரு படத்தை எதிர்பார்த்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் அப்செட் ஆகியுள்ளார்கள் என்பதை சோஷியல் மீடியாவில் அவர்கள் பதிவிடும் கமெண்ட்டுகளின் மூலமே உணரமுடிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!