
மம்முட்டியா அப்படி சொன்னார் : அதிர்ந்து போன பார்வதி
இந்தப்படத்தின் இயக்குனர் ரதீனா இந்த கதையை கூறியதும் அதில் உருவாக்கப்பட்டிருந்த கதாநாயகி பாத்திரம் பார்வதியை ரொம்பவே கவர்ந்து விட்டதால் இதில் நான்தான் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டார். அதன்பிறகுதான் கதாநாயகனாக நடிப்பது யார் என இயக்குனரிடம் கேட்க அவர் மம்முட்டி என பதில் சொல்லியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போனார் பார்வதி.
காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கசபா என்கிற படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி நடித்து இருந்தார் என கூறியதால் மம்முட்டி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் பார்வதி. இதனால் மம்முட்டிக்கு எதிரானவராகவே அவர் சித்தரிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் தனக்கு பிடித்த கதையும் கதாபாத்திரமும் கிடைத்தாலும் அதன் கதாநாயகன் மம்முட்டி என்பதால் அதில் எப்படி நடிக்க முடியும் என தயங்கினாராம் பார்வதி.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் பார்வதியை நடிக்க சிபாரிசு செய்ததே மம்முட்டி தான் என இயக்குனர் கூறியதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் பார்வதி. தனது சர்ச்சை பேச்சு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தன்னை படத்தில் நடிக்க அழைத்த மம்முட்டியின் பெருந்தன்மை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் புகழ்ந்து கூறியுள்ளார் பார்வதி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!