
23 நாட்களில் குருதி படத்தை முடித்த பிரித்விராஜ்
ஜன 05, 2021
Advertisement
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் "குருதி" படம் இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது.. ஆனால் டிச-9ல் ஆரம்பித்த இந்தப்படத்தை கிட்டத்தட்ட 23 நாட்களில் முடித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளனர் குருதி படக்குழுவினர். குறிப்பாக இந்தப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்பாளராகவும் தனது ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எனது இந்த இருபது வருட பயணத்தில், நூறு படங்களில் நடித்துள்ள அனுபவத்தில், "குருதி" படம் தான் மிகவும் துரிதமாக எடுக்கப்பட்ட படம் என உறுதியாக கூறுவேன். இத்தனைக்கும் இந்தப்படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகள், காட்டிற்குள் சேசிங் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. படக்குழுவினரின் ஒத்துழைப்பும் சக நடிகர்களின் அர்ப்பணிப்பும் தான் இந்தப்படத்தை விரைவில் முடிக்க உதவின. ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, ஒரு நடிகராக சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்த உதவியுள்ளது இந்த குருதி” என கூறியுள்ளார் பிரித்விராஜ்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எனது இந்த இருபது வருட பயணத்தில், நூறு படங்களில் நடித்துள்ள அனுபவத்தில், "குருதி" படம் தான் மிகவும் துரிதமாக எடுக்கப்பட்ட படம் என உறுதியாக கூறுவேன். இத்தனைக்கும் இந்தப்படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகள், காட்டிற்குள் சேசிங் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. படக்குழுவினரின் ஒத்துழைப்பும் சக நடிகர்களின் அர்ப்பணிப்பும் தான் இந்தப்படத்தை விரைவில் முடிக்க உதவின. ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, ஒரு நடிகராக சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்த உதவியுள்ளது இந்த குருதி” என கூறியுள்ளார் பிரித்விராஜ்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!