
மீண்டும் தொடங்கியது நானி படப்பிடிப்பு
நானி நடித்த "ஹாய் நான்னா" படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் புரமோசன் பணிகள், வெளியீட்டு பணிகள் காரணமாக சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஹாய் நான்னா படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுவிட்ட நிலையில் நானி மீண்டும் சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
தெலுங்கில் "சரிபோத்தா சனிவாரம்" என்ற டைட்டிலுடன் தயாராகும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பில் இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!