
திலீப்பின் பாஸ்போர்ட் அவரிடமே திரும்ப ஒப்படைப்பு
அந்த சமயத்தில் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தனது படங்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வெளிநாடு சென்று வந்தார். திரும்பி வந்த பிறகு மீண்டும் தனது பாஸ்போர்ட்டை போலீஸாரிடம் ஒப்படைத்து இருந்தார்.. தற்போது அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீஸார் திலீப்பின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கு அரசு வழக்கறிஞர் தரப்பில், இந்த வழக்கு மீண்டும் அப்பீலுக்கு செல்ல இருக்கிறது என்பதால் அவரது பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நீதிமன்றமோ, தற்போதைய வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.. அதனால் அவர் பாஸ்போர்ட்டை அவரிடம் வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து திலீப் வசம் அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!