
வெற்றிக்கு புதிய பார்முலாவை கையில் எடுத்த சிரஞ்சீவி
வால்டர் வீரய்யா படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரவிதேஜாவும் இணைந்து நடித்திருந்தது முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதை கவனத்தில் கொண்ட சிரஞ்சீவி அடுத்ததாக தன்னை தேடி வந்து சோக்காடே சின்னி நாயனா இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா குரசாலா சொன்ன கதையில் இன்னொரு இளம் நடிகருக்கான கதாபாத்திரமும் இருந்ததால் ரொம்பவே உற்சாகமாகி விட்டாராம். அந்த கதாபாத்திரத்தில் இளம் நடிகர் சித்து ஜொன்னலகடா நடிக்க உள்ளாராம். தனது அடுத்தடுத்த படங்களில் இப்படி இன்னொரு இளம் நடிகரும் நடிக்கும் வகையில் பார்த்துக் கொள்ள முடிவு செய்து விட்டாராம் சிரஞ்சீவி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!