
குணமடைந்தார் சிரஞ்சீவி: காட்பாதர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது
தற்போது பூரண நலமடைந்துள்ள சிரஞ்சீவி நேற்று ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கிய காட்பாதர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மோகன்ராஜா இயக்குகிறார். இது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக் ஆகும்.
இது தவிர சிரஞ்சீவியும், அவரது மகன் ராம்சரணும் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் படங்களின் வெளியீட்டுக்கு பிறகு ஆச்சார்யா வெளிவரும் என்று தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!