
தேதி கிடைக்காமல் தவிக்கும் ஆச்சார்யா
கொராட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது உண்மைதான். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நீடித்து வருகிறது. இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இதுதான் என முன் கூட்டியே தீர்மானிக்க முடியவில்லை.
தற்போது இரண்டாவது அலை குறைந்துள்ள நிலையில் ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம், புஷ்பா, சர்க்கார் வாரி பாட்டா உள்ளிட்ட படங்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ் பொங்கல் என முக்கியமான பண்டிகை தேதிகளை ஆக்கிரமித்துக் கொண்டன. குறிப்பாக, சங்கராந்தி பண்டிகையில் தனது படத்தை வெளியிடலாம் என நினைத்திருந்தார் சிரஞ்சீவி ஆனால் அந்த தேதியில் மட்டும் தற்போதைய நிலைமையில் 4 பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாக இருக்கின்றன
இந்த போட்டியின் காரணமாக இவற்றில் ஏதாவது ஒன்று இரண்டு படங்கள் கூட விலகுவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள். இதனால் பொங்கலுக்கு பிறகு தான் தங்கள் படத்தை வெளியிட்டாக வேண்டுமோ என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆச்சார்யா படக்குழு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!