
பேசுவதை விட மவுனத்தில் தான் சக்தி அதிகம் - ஜோதிகா பேட்டி
ஜோதிகா அளித்த பேட்டி : ‛என் சினிமா பயணம் அழகானது. இந்த நேரத்தில் இரண்டு பேருக்கு நன்றி சொல்லணும். ஒருவர் பிரியதர்ஷன் மற்றொருவர் வசந்த். எதுவும் புரியாத வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். என் கையை பிடித்துக் கொண்டு சூர்யா அழைத்து போனார். வாழ்கையிலும், சினிமாவிலும் இங்கே நிறைய கற்றுக்கொண்டேன்.
புதிய இயக்குனர்களிடம் நிறைய கதைகள் கேட்டேன். முடிந்தவரை என் படைப்புகளை சிறப்பானதாக கொடுத்து வருகிறேன். பெண்கள் வலிமையானவர்கள், அமைதியானவர்கள், சக்தி படைத்தவர்கள் என இப்படி தான் 90 சதவீத பெண்கள் வாழ்க்கை வாழ்கிறார்கள். பேசுவதை விட மவுனத்தில் தான் சக்தி இருப்பதாக நான் நம்புறேன்..
இந்த படம் எனக்கு புதிதாக இருந்தது. 50வது படமாக உடன்பிறப்பே அமைந்ததில் சந்தோஷம். சசிகுமார் இந்த படத்தில் மட்டுமல்ல நிஜமாகவே சகோதரன் போல் எனக்கு தெரிந்தார். சமுத்திரகனி கூட வேலை பார்த்தது ஒரு சைக்காலஜி மேட்சிங் மாதிரி இருந்தது. சூரி கூட தான் செட்டில் அதிகமாக பேசினேன். எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்துள்ளார். இந்த படத்தை மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!