
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பிரபாஸ்?
அக் 06, 2021
Advertisement
"பாகுபலி" படங்களின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உயர்ந்தவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். "ராதேஷ்யாம்" படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், தற்போது "ஆதி புருஷ், சலார்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து "மகாநடி" படத்தை இயக்கிய நாக் அஸ்வின் படத்தில் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக பிரபாஸ் வாங்கும் சம்பளம் பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. "ஆதி புருஷ்" படத்திற்காக பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
ஹிந்தி வசூல் நடிகர்களான சல்மான்கான், அக்ஷ்ய் குமார் கூட அவ்வளவு சம்பளத்தை இதுவரை வாங்கியதில்லை. தென்னிந்திய அளவில் இதுவரையில் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிறார்கள். ஆனால், அவரை மிஞ்சும் அளவிற்கு விஜய்யின் அடுத்த பட சம்பளம் 120 கோடி என ஒரு தகவலைக் கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்களில பரப்பினார்கள்.
150 கோடியே இல்லை என்றாலும் 100 கோடியாக இருந்தால் கூட தற்போது நடிக்கும் படங்கள் மூலம் 500 கோடி வரையாவது சம்பாதித்துவிடுவார் பிரபாஸ்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக பிரபாஸ் வாங்கும் சம்பளம் பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. "ஆதி புருஷ்" படத்திற்காக பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
ஹிந்தி வசூல் நடிகர்களான சல்மான்கான், அக்ஷ்ய் குமார் கூட அவ்வளவு சம்பளத்தை இதுவரை வாங்கியதில்லை. தென்னிந்திய அளவில் இதுவரையில் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிறார்கள். ஆனால், அவரை மிஞ்சும் அளவிற்கு விஜய்யின் அடுத்த பட சம்பளம் 120 கோடி என ஒரு தகவலைக் கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்களில பரப்பினார்கள்.
150 கோடியே இல்லை என்றாலும் 100 கோடியாக இருந்தால் கூட தற்போது நடிக்கும் படங்கள் மூலம் 500 கோடி வரையாவது சம்பாதித்துவிடுவார் பிரபாஸ்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!