
ஜோதிகா எடுக்கும் முடிவுகளை ஆச்சர்யமாக பார்க்கிறேன் - சூர்யா
சூர்யா பேசும்போது : 1998ல் தரமணி பிலிம்சிட்டியில் இயக்குனர் வசந்த் ஒரு பாறைக்கு அருகில் ஜோதிகாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். வேற ஊர், வேற மொழியை தாண்டி இங்கு வந்து நம்மூர் மொழியை கற்று, இந்த மக்கள் மனதுக்குள் அவர் இடம் பிடித்துள்ளார். அவர் ஏன் சில படங்கள் பண்ணினார், பண்ணவில்லை என தெரியவில்லை. வாழ்க்கையில் அவர் எடுக்கும் முடிவுகளை ஆச்சர்யமாக பார்க்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நண்பனாக, கணவனாக ஜோ எனக்கு கிடைத்ததற்கு நன்றி. ஜோதிகாவின் 50வது படம் உடன்பிறப்பே. மொத்த படக்குழுவும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளனர். அழகான படம் படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள் என்றார் சூர்யா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!