
கோடி கணக்கில் வசூல் விளம்பரங்கள் மக்களை ஏமாற்றவே: ரகசியத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்
செப் 22, 2021
Advertisement
பிரபல தெலுங்கு தயாரிப்பளார் சி.கல்யாண். ஜோதி லட்சுமி, லோபர், ஜெய்சிம்மா, இண்டலிஜெண்ட, ரூலர் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக இருந்தார்.
ஆந்திர மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை, அதற்குரிய வரி உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் ஆந்திர அமைச்சர் பேர்னி நானி, தயாரிப்பாளர்கள் தில் ராஜு, டிவிவி தானய்யா உள்ளிட்ட பல முக்கியத் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தயாரிப்பாளர் சி.கல்யாணும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் கல்யாண் பேசியது இப்போது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசியிருப்பதாவது: போஸ்டர்களில் ரூ.200 கோடி, ரூ.500 கோடி வசூல் என்று போடுவதெல்லாம் மக்களை ஏமாற்றவே. ஹிட் ஆகியிருக்கும் ஒரு திரைப்படத்தை அவர்கள் தவறவிடுகிறார்கள் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இதைச் செய்கிறோம். இதனால் பலன் கிடைத்திருக்கிறது. இங்கு தவறுகளே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எல்லாம் தவறாக நடக்கவில்லை. சில படங்கள் உண்மையிலேயே நல்ல வசூலைப் பெறுகின்றன. என்று பேசியுள்ளார்.
இந்த பேச்சை செல்போனில் பதிவு செய்து யாரோ வெளியிட்டுள்ளனர். அது இப்போது சர்ச்சை ஆகியுள்ளது.
ஆந்திர மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை, அதற்குரிய வரி உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் ஆந்திர அமைச்சர் பேர்னி நானி, தயாரிப்பாளர்கள் தில் ராஜு, டிவிவி தானய்யா உள்ளிட்ட பல முக்கியத் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தயாரிப்பாளர் சி.கல்யாணும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் கல்யாண் பேசியது இப்போது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசியிருப்பதாவது: போஸ்டர்களில் ரூ.200 கோடி, ரூ.500 கோடி வசூல் என்று போடுவதெல்லாம் மக்களை ஏமாற்றவே. ஹிட் ஆகியிருக்கும் ஒரு திரைப்படத்தை அவர்கள் தவறவிடுகிறார்கள் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இதைச் செய்கிறோம். இதனால் பலன் கிடைத்திருக்கிறது. இங்கு தவறுகளே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எல்லாம் தவறாக நடக்கவில்லை. சில படங்கள் உண்மையிலேயே நல்ல வசூலைப் பெறுகின்றன. என்று பேசியுள்ளார்.
இந்த பேச்சை செல்போனில் பதிவு செய்து யாரோ வெளியிட்டுள்ளனர். அது இப்போது சர்ச்சை ஆகியுள்ளது.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!