
தயாரிப்பாளர் சங்கங்கள் - ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு
இந்த சங்கத்திலிருந்து பிரிந்த சில முக்கிய நிர்வாகிகள் சங்கத்தை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கமும், நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் ஒன்றாகப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது இரண்டு சங்கத்தினரும் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவை உருவாக்கியுள்ளார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பாரதிராஜா, முரளிதரன், எஸ்ஏ சந்திரசேகரன், கேயார், கலைப்புலி தாணு, தற்போதைய நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், மன்னன், கதிரேசன், ஆர்கே சுரேஷ், சந்திர பிரகாஷ் ஜெயின், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தியாகராஜன், டி.சிவா, தனஞ்செயன், எஸ்ஆர் பிரபு, லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில், திரையுலக நலன் கருதி இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்கள். மாதம் இரு முறை இந்த ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது.
டி ராஜேந்தர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள் தற்போது என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரிய வரும். அந்த சங்கத்தில் உள்ளவர்களை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால், அவர்கள் படங்களைத் தயாரிக்க சிக்கல்கள் எழலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!