
நினைவெல்லாம் நீயடா : இளையராஜாவின் 1417வது படம்
இந்நிலையில் அவரது இசையில் உருவாகும் 1417வது படமாக நினைவெல்லாம் நீயடா என்கிற படம் உருவாகிறது. சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்குகிறார். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார்.
இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் அப்பா படத்தில் நடித்த யுவலஷ்மி நடிக்கிறார். அவருடன் தோழியாக மூக்குத்தி அம்மன் புகழ் அபிநயஸ்ரீ நடிக்கிறார். மற்றும் மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். பியர் பிரேமா காதல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது: காதலைக் கொண்டாடிய அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், 96 பட வரிசையில் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதையாக இந்தப்படம் உருவாகிறது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் உருவாகாத இதயங்களையும் உருக வைத்துவிடும். தற்போது படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாடல்கள் பாண்டிச்சேரி, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!