
தலைவி பஞ்சாயத்து நிறைவு : தியேட்டர்களில் வெளியாகும் ?
இப்படத்தை செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதே சமயம் படத்தை இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான உரிமையையும் விற்றிருந்தார்கள். அது பற்றி தெரிய வந்ததும் படத்தைத் தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்று தியேட்டர்காரர்கள் தெரிவித்தனர்.
நான்கு வாரங்களுக்குப் பிறகே படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்பதை மீறி இரண்டு வாரங்களில் கொடுத்ததற்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக நேற்று முதல் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது பேச்சு வார்த்தை முடிவடைந்துள்ளதாம். படத்தை நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியிட மாற்றத்தைச் செய்கிறோம் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாம். எனவே, படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!