
எனக்கு நானே தடை போட்டுக் கொள்வேன், நானி பேச்சு
இந்நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய நானி, “நானும் தியேட்டர்காரர்களில் ஒரு அங்கம்தான், எனக்கும் அவர்கள் பிரச்சினை தெரியும். சூழ்நிலைகள் சரியாக இல்லாமல், எதிர்காலத்தில் தியேட்டர்களில் வெளியிட வாய்ப்புகள் வந்தாலும், என் படத்தை நான் ஓடிடி தளங்களில் வெளியிடும் முடிவை எடுப்பேன். மற்றவர்கள் எனக்குத் தடை போடுவதற்கு முன்பே எனக்கு நானே தடை போட்டுக் கொள்வேன். இந்த விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் என்னை வெளியாள் போல நினைத்துவிட்டார்கள்,” என்றும் வருத்தப்பட்டுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் நீண்ட காலம் தங்கள் படங்களை வெளியிட முடியாமல் தவிக்கும் சில தயாரிப்பாளர்கள் நல்ல விலை கிடைக்கும் போது அப்படங்களை ஓடிடி தளங்களக்கு விற்று விடுகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!