
சாகுந்தலம் படப்பிடிப்பை முடித்தபின் சமந்தா நெகிழ்ச்சி
ஆக 13, 2021
Advertisement
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது "சாகுந்தலம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்காக அவருடைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டுள்ளார். தன்னுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சிப் பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.
“சாகுந்தலம்" படப்பிடிப்பு நிறைவடைந்தது. என் வாழ்நாளில் இப்படம் என்னுடனேயே இருக்கும். என் சிறு வயதில் தேவதைக் கதைகளை நம்புவேன். இப்போதும் அது பெரிதாக மாறிவிடவில்லை. என் கனவை நனவாக்கியதில் குணா சார் என்னுடைய தேவதை காட்பாதர். அவர் இந்தப் படத்தைப் பற்றி என்னிடம் விளக்கிய போது நான் உடனடியாக அந்த அற்புத உலகத்திற்குள் நுழைந்துவிட்டேன், அது சாகுந்தலம் உலகம். அப்படி ஒரு உலகம் எங்குமில்லை. அதேசமயம் எனக்கு பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. அந்த அழகை திரையில் அப்படியே காட்ட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.
இன்று(நேற்று) நான் விடைபெறும் நிலையில், குணசேகர் சார் என்ற இந்த அற்புதமான மனிதர் மீது எனக்கு மிகுந்த அன்பும், நன்றியுணர்வும் இருக்கிறது. எனது எதிர்பார்ப்புகளை மீறி ஒரு உலகத்தை அவர் படைத்துவிட்டார். என்னுள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருக்கிறது. நன்றி சார்,” என படத்தைப் பற்றியும், இயக்குனர் குணசேகர் பற்றியும் மிகவும் பாராட்டி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
“சாகுந்தலம்" படப்பிடிப்பு நிறைவடைந்தது. என் வாழ்நாளில் இப்படம் என்னுடனேயே இருக்கும். என் சிறு வயதில் தேவதைக் கதைகளை நம்புவேன். இப்போதும் அது பெரிதாக மாறிவிடவில்லை. என் கனவை நனவாக்கியதில் குணா சார் என்னுடைய தேவதை காட்பாதர். அவர் இந்தப் படத்தைப் பற்றி என்னிடம் விளக்கிய போது நான் உடனடியாக அந்த அற்புத உலகத்திற்குள் நுழைந்துவிட்டேன், அது சாகுந்தலம் உலகம். அப்படி ஒரு உலகம் எங்குமில்லை. அதேசமயம் எனக்கு பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. அந்த அழகை திரையில் அப்படியே காட்ட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.
இன்று(நேற்று) நான் விடைபெறும் நிலையில், குணசேகர் சார் என்ற இந்த அற்புதமான மனிதர் மீது எனக்கு மிகுந்த அன்பும், நன்றியுணர்வும் இருக்கிறது. எனது எதிர்பார்ப்புகளை மீறி ஒரு உலகத்தை அவர் படைத்துவிட்டார். என்னுள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருக்கிறது. நன்றி சார்,” என படத்தைப் பற்றியும், இயக்குனர் குணசேகர் பற்றியும் மிகவும் பாராட்டி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!