
யாஷிகாவின் சிகிச்சை போட்டோ வெளியானது
இதில் பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் உட்பட 3 பேரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் யாஷிகா ஆனந்துக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெறும் போட்டோ வெளியாகியுள்ளது.
இடது காலில் பெரிய கட்டுடன் உள்ளார், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பெட்டில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் யாஷிகாவின் இந்த போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.
"யாஷிகா எலும்புகள் சரியாகி அவர் எழுந்து நடக்கவே 6 மாதங்கள் வரை ஆகும். அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உரிய படுக்கை வசதிகளுடன் வீட்டில் இருக்கலாம். அவருக்கு எப்போதும் உதவிக்கு ஒரு ஆள் வேண்டும்" என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் தனது தோழி நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் யாஷிகா.
யாஷிகா பூரண நலம் பெற்றாலும் முன்புபோல அவர் வேகமாக நடக்கவோ, நடனமாடவோ முடியாது. என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!