
யாஷிகா ஆனந்த் குணமடைய மூன்று மாதமாகும் : தாயார் தகவல்
இந்நிலையில், யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதோடு தோழியின் மரணத்துக்கும் காரணமாகி விட்டதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு அவரது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது யாஷிகாவின் தாயார் சோனல் ஆனந்த் மகளின் உடல்நிலை குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், யாஷிகா ஆனந்தின் கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு, யாஷிகாவின் தோழி இறந்த செய்தி அவருக்கு இன்னமும் தெரியாது. அதை தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். அதனால் தோழி குறித்து யாஷிகா கேட்டபோது, அவரும் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லியிருக்கிறோம். மேலும், யாஷிகா ஆனந்திற்கு நடக்கும் அறுவை சிகிச்சைக்குப்பிறகு இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் அவரால் நடக்க முடியும். மூன்று மாதம் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!