
நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலிட் செய்த மெஹ்ரீன்
கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தங்களது திருமணத்தை ரத்து செய்வதாக இருவரும் அறிவித்திருந்தனர். திருமணத்திற்கு முன்பே நிச்சயதார்த்தத்துடன் இருவரும் பிரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவரும் அந்தமான் சென்றிருந்த போது கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் செய்த போது மெஹ்ரீனிடம் பவ்யா பிஷ்னாய் காதலை சொல்லியிருந்தார். தங்களது திருமணத்தை சிறப்பாக நடத்த இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில் பிரிந்தனர்.
இந்நிலையில் தனது சமூக வலைத்தளங்களில் இருந்த திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார் மெஹ்ரீன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ள மெஹ்ரீன் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!