
பாகிஸ்தான் விருதை திருப்பி தர மறுத்த திலீப் குமார்
1993ல் அவர் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுவென்றார். 1997ல் அவர் என்டிஆர் தேசிய விருது பெற்றார். அவருக்கு 2009ல் சிஎன்என் - ஐபிஎன் உடைய வருடத்தின் சிறந்த இந்தியன் - வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதிகபட்ச விருதுகளை வாங்கிய நடிகர் என, கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். திலீப் குமார் நடிகர் என்பதைத் தாண்டி மனித நேயமிக்கவராக விளங்கினார். இந்திய மற்றும் பாகிஸ்தானிய மக்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க பாடுபட்டார். ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
1998ல் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மிக உயரிய சிவிலியன் விருதான நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு இந்த விருதை பெற்றவர் திலீப் குமார் தான். கார்கில் யுத்தம் நடந்தபோது, சிவசேனா தலைவர் பால்தாக்கரே திலீப் குமாரை நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருதைத் திருப்பித்தர வலியுறுத்தினார். அதற்கு திலீப் குமார் "இந்த விருது எனது மனிதாபிமான செயல்களுக்காக தரப்பட்டது. அதற்கென என்னை நான் அர்ப்பணித்துள்ளேன். ஏழைகளுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கிடையே பண்பாடு மற்றும் இன இடைவெளிகளுக்குப் பாலம் அமைக்கும் பணியை பல்லாண்டு காலமாகவே செய்து வருகின்றேன். அரசியல் மற்றும் மதம் தான் இத்தகு எல்லைகளை உருவாக்கியுள்ளன. எப்படியாவது இருநாட்டு மக்கள் ஒன்றுபட என்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கின்றேன். எனக்குச் சொல்லுங்கள், இது கார்கில் சண்டைக்கு எவ்வகையில் உதவும்?" என்று கேட்டதுடன் விருதை திருப்பி அளிக்க மறுத்துவிட்டார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!