
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் விஷால்!
இந்த நிலையில் தற்போது தனது 31ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் விஷால். இந்த மாதம் முழுக்க படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தநேரத்தில் வருகிற 9-ந் தேதி முதல் எனிமி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் 8 நாட்களுக்கு அதே ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி ஆகியோரும் கலந்து கொள்கிறார்களாம். அதற்காக இப்போதே ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கிறாராம் எனிமி டைரக்டர் ஆனந்த் சங்கர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!