
வெற்றி பெற்றவர்கள் தனிமையில் இருப்பது ஏன்? - கங்கனா விளக்கம்
இதையடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை கதையில் கங்கனா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர சமூக வலைதளத்தில் அடிக்கடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அவரது டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தோல்வி அடைந்தவர்களை மக்கள் விட்டு விடுவார்கள். அவர்களை கேவலமாகவும் நடத்துவார்கள். தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவும் விடாது. கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை பயமுறுத்துவார்கள். கீழே தள்ளி விடவும் முயற்சிப்பார்கள். தனிமைப்படுத்தவும் செய்வார்கள். வெற்றி பெற்றவர்கள் தனிமையில் தான் இருக்க வேண்டும். அதனால் தான் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தனித்து இருப்பார்கள் என்று கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!