
நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் பதில்
நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருப்பதால்தான் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார் என்ற தகவல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், “நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு விக்னேஷ் சிவன், “ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றவற்றிற்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன்,” என பதிலளித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இப்போதுதான் கடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை அடுத்து வரப் போவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் எந்த அலை முடிந்ததும் திருமணம் வைத்துக் கொள்ளப்போகிறார் விக்னேஷ் சிவன்?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!