
ஷங்கர் மீது ஐதராபாத்திலும் வழக்கு தொடர்ந்த லைகா
ஜூன் 16, 2021
Advertisement
இந்தியன் 2 பட விவகாரத்தில் அப்படத்தை முடித்துக் கொடுப்பதற்கு முன்பு டைரக்டர் ஷங்கர் வேறு படம் இயக்கும் பணிகளில் இறங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு குறித்த விசாரணை நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையே தெலுங்கில் தில் ராஜூ தயாரிப்பில் ராம் சரண் நடிக்கும் பட வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டிருப்பதால் தற்போது ஐதராபாத் நீதிமன்றத்திலும் ஷங்கர் படம் இயக்குவதற்கு எதிராக இன்னொரு வழக்கைத் தொடர்ந்துள்ளது லைகா நிறுவனம்.
இதுகுறித்து டைரக்டர் ஷங்கரின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தியன்-2 பட சம்பந்தமான வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ஒரு புகார் அளித்திருக்கிறார்.
இதையடுத்து, லைகா நிறுவனம் சார்பிலும் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதியோ, ஏற்கனவே நிலுவையில் இருக்கும் தடை கோரிய வழக்கின் விசாரணையில் தீர்வு கண்ட பிறகுதான் மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுக்க முடியும் என்று சொல்லிவழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே தெலுங்கில் தில் ராஜூ தயாரிப்பில் ராம் சரண் நடிக்கும் பட வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டிருப்பதால் தற்போது ஐதராபாத் நீதிமன்றத்திலும் ஷங்கர் படம் இயக்குவதற்கு எதிராக இன்னொரு வழக்கைத் தொடர்ந்துள்ளது லைகா நிறுவனம்.
இதுகுறித்து டைரக்டர் ஷங்கரின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தியன்-2 பட சம்பந்தமான வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ஒரு புகார் அளித்திருக்கிறார்.
இதையடுத்து, லைகா நிறுவனம் சார்பிலும் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதியோ, ஏற்கனவே நிலுவையில் இருக்கும் தடை கோரிய வழக்கின் விசாரணையில் தீர்வு கண்ட பிறகுதான் மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுக்க முடியும் என்று சொல்லிவழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!