
என்டிஆருக்கு பாரத ரத்னா : மகன் பாலகிருஷ்ணா கோபம்
இந்நிலையில் நேற்று தன்னுடைய 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய என்டிஆரின் மகனும், நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அரசியல், சினிமா பற்றி பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
என்டிஆருக்கு பாரத ரத்னா விருதுக்கான கோரிக்கை பற்றி அவரிடம் கேட்ட போது, “எனது அப்பா ஒரு போதும், அதிகாரத்துக்காகவோ, விருதுகளுக்காகவோ ஏங்கியதில்லை. எனது அப்பாவுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தால், யார் அது பற்றி முடிவெடுக்கிறார்களோ, அவர்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும். ஆனால், அவர் மக்களிடம் பெற்ற அன்போடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒன்றுமில்லை,” என கோபமாகப் பேசினார்.
என்டிஆர் மறைந்து 25 வருடங்களாகிவிட்டது. சிலருக்கு மறைவுக்குப் பின்புதான் பாரத ரத்னா வழங்கப்பட்டது. என்டிஆர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் அவரை விருதுக்காக பரிசீலிக்கவில்லை என்ற கோபம் தெலுங்குத் திரையுலகத்தினரிடம் அதிகமாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!