
கொரோனா பாதிப்பு : மீனவ குடும்பங்களுக்கு உதவும் தர்ஷா குப்தா
கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், உணவு இன்றி வாடும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற உதவி பணிகளை செய்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.
ராயபுரத்தில் வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உள்ளார். "என்னால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளேன் மற்றவர்களும் இதுபோன்றவர்களுக்கு உதவ வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற சேவைகளை இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் செய்து மக்களின் துயர் துடைக்க என்னால் இயன்ற பணிகளை செய்வேன். என்கிறார் தர்ஷா குப்தா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!