
பிரியா பவானியை வம்புக்கிழுத்த மான்ஸ்டர் குழுவினர்
அப்புகைப்படத்தைப் பார்த்த பிரியா பவானி சங்கர், “வேறு எதுவும் கிடைக்கவில்லையா ?,” எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக "மணப்பெண்" கோலத்தில் பிரியா இருக்கும் மற்றொரு புகைப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் கடுப்பான பிரியா, “ஜென்டில்மேன் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், நெல்சன் இந்தப் புகைப்படம் பற்றி நேத்துதான் நாம் பேசினோம். இது உங்கள் ஐடியா என்றால் நான் பழி வாங்கத் தயாராக இருக்கிறேன்,” என இயக்குனரிடம் கோபப்பட்டார்.
பதிலுக்கு இயக்குனர் நெல்சன், “இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதை விட முந்தைய போட்டோ நன்றாக இருந்தது. அந்தப் படத்தின் கையில் இருக்கும் பொருள் காதலின் சின்னம்,” எனக் கூறியிருந்தார். அதன்பின் பிரியாவுடன், எஸ்ஜே சூர்யாவும் கையில் துடைப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் நெல்சன்.
அதைப் பார்த்து நொந்து போன எஸ்.ஜே.சூர்யா, "இந்த கதை இப்பக்குள்ள முடியாதா,” என பதிவிட்டார். ஒரு வழியாக அந்தப் புகைப்படத்துடன் சமாதானம் அடைந்தார் பிரியா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!