
கொரோனாவிலும் விடாமல் சூட்டிங் : மலையாள பிக்பாஸ்க்கு பூட்டு!
ஆனாலும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்களே பாக்கி உள்ள நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது. தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியதால், படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும், படப்பிடிப்பில் ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார்.
இதையும் மீறி படப்பிடிப்பு நடந்து வந்ததால் நேற்று திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரி ப்ரீத்தி பார்கவி, பூந்தமல்லி தாசில்தார் சங்கர், உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் தலைமையில் சென்ற அரசு அதிகாரிகள் நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை செய்தனர். அப்போது படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்ததை உறுதி செய்தனர்.
அதைத் தொடர்ந்து, படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டனர். மேலும் அங்கு இருந்த நடிகர், நடிகைகளை வெளியேற்றினர். ஷூட்டிங் நடைபெற்ற பிக் பாஸ் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஷூட்டிங் நடத்திய நிறுவனத்துக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!