
தடுப்பூசி அலர்ஜி பற்றி பார்த்திபன் விளக்கம்
ஏப் 27, 2021
Advertisement
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பலரும் கொரோனா தடுப்பூசி எடுத்து வருகின்றனர். நடிகர் பார்த்திபன் சில வாரங்களுக்கு முன் கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அதனால் அவருக்கு ஏற்பட்ட அலர்ஜியால் முகம் வீங்கியது. இதுப்பற்றி டுவிட்டரில் பதிவிட்டவர், பின் அந்த பதிவை நீக்கினார். தேவையில்லாமல் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்த வேண்டாம் என்று தனது பதிவை நீக்கினார்.
இந்நிலையில் டுவிட்டரில் பார்த்திபன் பதிவிட்டு இருப்பதாவது : என் அன்பு மகள் கீர்த்தனா இத்த"கவலை" பதிவுச் செய்யச் சொன்னார். எனவே இது நூறு சதவிகித உண்மை. ஒவ்வாமை (allergy) சில சமயங்களில் உணவு, ஒப்பனை, அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு. பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும். இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது. ஒரே நாளில் சரியாகியும் விட்டது. எனவே தடுப்பூசி அவசியமானது. ஆனால் ஜூரம், உடல் வலி போன்ற ஒரு சில விளைவுகள் வந்து போகலாம். என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி"" என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் டுவிட்டரில் பார்த்திபன் பதிவிட்டு இருப்பதாவது : என் அன்பு மகள் கீர்த்தனா இத்த"கவலை" பதிவுச் செய்யச் சொன்னார். எனவே இது நூறு சதவிகித உண்மை. ஒவ்வாமை (allergy) சில சமயங்களில் உணவு, ஒப்பனை, அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு. பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும். இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது. ஒரே நாளில் சரியாகியும் விட்டது. எனவே தடுப்பூசி அவசியமானது. ஆனால் ஜூரம், உடல் வலி போன்ற ஒரு சில விளைவுகள் வந்து போகலாம். என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி"" என பதிவிட்டுள்ளார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!