
ஊரடங்கில் வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் இல்லை
ஏப் 27, 2021
Advertisement
தமிழ் சினிமாவில் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு பெப்சி தொழிலாளர்களை அழைத்துச் சென்றால் வெளியூர்களில் வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த நாளுக்குரிய சம்பளத்தையும், பேட்டாவையும் வழங்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள வழக்கம்.
தற்போது கொரோனா 2வது அலை காரணமாக வெளியூரில் படப்பிடிப்பு நடக்கும் பல படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரங்கு, உரிய இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல். இவற்றால் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.
இதனால் படப்பிடிப்பு நடக்காத நாட்களில் பெப்சி ஊழியர்களுக்கு எங்களால் சம்பளம் வழங்க இயலவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்றுக் கொண்ட பெப்சி வேலை இல்லாத நாட்களுக்கு தயாரிப்பாளரிடமிருந்து சம்பளம் பெற வேண்டாம் என்று அனைத்து திரைப்பட சங்கங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.
தற்போது கொரோனா 2வது அலை காரணமாக வெளியூரில் படப்பிடிப்பு நடக்கும் பல படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரங்கு, உரிய இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல். இவற்றால் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.
இதனால் படப்பிடிப்பு நடக்காத நாட்களில் பெப்சி ஊழியர்களுக்கு எங்களால் சம்பளம் வழங்க இயலவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்றுக் கொண்ட பெப்சி வேலை இல்லாத நாட்களுக்கு தயாரிப்பாளரிடமிருந்து சம்பளம் பெற வேண்டாம் என்று அனைத்து திரைப்பட சங்கங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!