
இந்திரஜித்துக்கு கேக்வெட்டி விடைகொடுத்து அனுப்பிய விஷ்ணு விஷால்
முரளி கார்த்திக் என்பவர் இயக்கி வரும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இந்திரஜித், தற்போது தனது காட்சிகளை நிறைவு செய்துள்ளார். படக்குழுவினர் கேக் வெட்டி அவருக்கு விடைகொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திரஜித் கூறும்போது, “விஷ்ணு விஷால் நிறுவனத்தின் அருமையான விருந்தோம்பல்.. விஷ்ணு ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி.. விரைவில் படத்தை திரையில் எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.
விஷ்ணு விஷாலும் இந்திரஜித் குறித்து கூறும்போது, “இந்திரஜித்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. என்ன ஒரு திறமையான நடிகர் மற்றும் மரியாதையான மனிதர்.. சக நடிகராக அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!