
யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கு எதிர்ப்பு : போலீசில் புகார்
ஏப் 10, 2021
Advertisement
யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்பட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 4 அன்று தொலைக்காட்சியில் வெளியான படம் மண்டேலா. இந்த படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோ தயாரித்தது. இந்நிலையில் மண்டேலா படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதை அடுத்து இப்படத்தை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்ப நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, படநாயகன் யோகிபாபு, டைரக்டர் மடோனா அஷ்வின் மற்றும் ஒய்நாட் ஸ்டியோ நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!