
பத்திரிக்கையாளரிடம் ரகளை - விஜய் சேதுபதி படப்பிடிப்பில் சலசலப்பு
இந்நிலையில் நேற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் போட்டோ எடுக்க முயன்றார். அவரை அங்கிருந்த படப்பிடிப்பு பாதுகாவலர்கள் தடுத்தனர். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளரை மிரட்டல் விடுக்கும் வகையில் பாதுகாவலர்கள் பேசி உள்ளனர். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது பதட்டமான சூழல் உருவானது. பின்னர் அவர்களை நடிகர் விஜய் சேதுபதி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. மேலும் மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் காவலம் நிலையம் அழைத்து விசாரித்தனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!