
ஜல்லிக்கட்டு கதையில் அப்பாணி சரத்
இந்நிலையில் தமிழில் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரும் சிகாமணி மற்றும் சகலகலாசலா போன்ற திரைப்படங்களை இயக்கியவருமான வினோத் குருவாயூர் இயக்குகிறார். ஜல்லிக்கட்டு பற்றிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரிச் மல்டி மீடியா தயாரிக்கிறது.
படம் குறித்து இயக்குனர் வினோத் குருவாயூர் கூறியதாவது: தமிழ்நாடு, அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. தமிழ் திரைப்படம் இயக்க வேண்டும் எனும் எனது கனவு தற்போது நிறைவேறி உள்ளது. தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. அது குறித்து நன்கு ஆராய்ந்து இந்த படத்தை உருவாக்குகிறோம் படப்பிடிப்பு மே 15 அன்று தொடங்குகிறது. என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!