
ஆதி புருஷ் படத்தில் நடிப்பது பெருமை - கிரித்தி சனோன்
மார் 12, 2021
Advertisement
ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கிரித்தி சனோன். ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
ராமாயணக் கதையாக உருவாகும் இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ் நடிக்க, ராவணன் ஆக சைப் அலிகான் நடிக்கிறார். சீதை கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் கிரித்தி சனோன் ஒப்பந்தம் ஆகி உள்ளார். லட்சுமணன் வேடத்தில் சன்னி சிங் நடிக்கிறார்.
இப்படத்தில் நடிப்பது பற்றி கிரித்தி, “ஆதி புருஷ் படம் எனக்கு மிகவும் சிறப்பானது, பெருமையானது. இந்த மாய உலகத்தில் நடிப்பதில் இருக்கும் உற்சாகத்தை மீறி அதை மரியாதையாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த "1 நேனொக்கடைன்" படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரித்தி சனோன். அதன்பின் "ஹீரோபன்டி" படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.
2015ல் வெளிவந்த "டோச்சே" தெலுங்குப் படத்திற்குப் பிறகு ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்க வந்துள்ளார். "ஆதி புருஷ்" படம் ஒரே சமயத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாராகிறது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.
ராமாயணக் கதையாக உருவாகும் இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ் நடிக்க, ராவணன் ஆக சைப் அலிகான் நடிக்கிறார். சீதை கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் கிரித்தி சனோன் ஒப்பந்தம் ஆகி உள்ளார். லட்சுமணன் வேடத்தில் சன்னி சிங் நடிக்கிறார்.
இப்படத்தில் நடிப்பது பற்றி கிரித்தி, “ஆதி புருஷ் படம் எனக்கு மிகவும் சிறப்பானது, பெருமையானது. இந்த மாய உலகத்தில் நடிப்பதில் இருக்கும் உற்சாகத்தை மீறி அதை மரியாதையாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த "1 நேனொக்கடைன்" படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரித்தி சனோன். அதன்பின் "ஹீரோபன்டி" படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.
2015ல் வெளிவந்த "டோச்சே" தெலுங்குப் படத்திற்குப் பிறகு ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்க வந்துள்ளார். "ஆதி புருஷ்" படம் ஒரே சமயத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாராகிறது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!